tag Guru Paarvaigal

ஞாயிறு, 8 மே, 2011

மத காவலர்களுக்கு

தோழர்களே!
சிங்கங்களாய் தானே இருந்தீர்கள்,
மதம் பிடித்த யானையாய் ஏன் மாறினீர்கள்?

மதங்களின் தூண்களே, ஒரு சந்தேகம்!

மனிதனை காக்க கடவுளா அல்லது
கடவுளை காக்க மனிதனா?

கடவுள்களின் கைகளில் இருந்து ஆயுதத்தை பிடிங்கினீர்கள்!
சந்தோஷ பட்டோம்!
உபயோக படுத்த மறுக்கிறார் என்று கடவுள் மீதே குற்றம் சட்டி
அந்த ஆயுதங்களை நீங்கள் உபயோகபடுத்தினீர்கள்!

அன்பை தொலைத்து ஆயுதம் தேடுபவர்களே!

மதம் என்பது ஒரு வழி அவ்வளவே!
பிறப்பில் இருந்து இறப்பு வரை நம்மை வழி நடத்தி செல்வது!
எந்த வழியில் சென்றாலும் முடிவு என்பது மரணம் மட்டுமே!

வழியின் முடிவில் முடிவு காத்திருக்க வேண்டும்!
வழியே முடிவாக கூடாது! 


1 கருத்து:

sunaith சொன்னது…

GOOD THOUGHT... GREAT...

கருத்துரையிடுக