மாஜி கவிஞன்
நான் ஒரு மாஜி கவிஞன்!
அப்போதெல்லாம் என் பேனா மூடி கழட்டினால் போதும்!
கவிதைகளை பிரசவிக்கும்!
எந்த வகுப்பு ஆனாலும், நோட்டுபுத்தகங்கள்
கவிதைகளை வரவேற்க தயாராகும்!
கவிதை திரி ஏறிய, காதல் காவல் காக்கும்!
புகழுவதும், இகழுவதும் எல்லாமே கவிதையால் தான்!
கால சக்கரம் சுற்றிய வேகத்தில்,
வேலை தேடி சுற்றி சுற்றி அலைந்ததில்,
சமுத்திரமாய் நினைத்திருந்த திறமை பாலைவனமாய் சுண்டியது!
இப்போது நேரம் கிடைத்தால் கூட என் கை பேனா பிடிப்பது இல்லை!
ஆவியாகி போன கவிதைகளை யாரேனும் கண்டு பிடித்தால்,
தயவு செய்து எனக்கு அனுப்பி விடாதீர்கள்!
நான் ஒரு மாஜி கவிஞன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக