tag Guru Paarvaigal: kathal kolvom!!

ஞாயிறு, 8 மே, 2011

kathal kolvom!!

இளமை பருவ நந்தவனத்தில் கள்ளி செடி இந்த காதல்!
பொறுப்புக்கள் எல்லாம் மறக்க வைக்கும்!
விழிகள் திறந்தும் கனவுகள் கொடுக்கும்!
வகுப்பினில் கவிதை எழுத செய்யும்!
உதிர்ந்த பூ, சாக்கலேட் கவர் பொறுக்க வைக்கும்!
இமை இரண்டிற்கும் இடையில் நிற்கும்!
சுற்றம் எல்லாம் நம்மை பித்தனாய் பார்க்க வைக்கும்!
நிச்சயமாய் ஒரு நாள் இது
           கண்களில் துளி நீரை வைக்கும்!
           கன்னம் முழுவதும் தாடி வைக்கும்!
          தாகத்துக்கு மது கொடுக்கும்!
         தொட்டு கொள்ள விசமும் கொடுக்கும்!
காதல் கொடுப்பதை விடவும், நாம் இழப்பது அதிகம்!
ஆதலினால், காதல் கொல்வோம்!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக