தலைப்பு ஒன்றும் கிடைக்க வில்லை
எப்போதும் போர் அடிக்கும் கல்லூரி வகுப்புக்குள் நித்தம் ஒரு கவிதை பூ பூக்கும்!
இன்றைய தேதிக்கான பூ இன்னும் பூக்க வில்லை !
மதிய சாப்பாடு உறக்கம் கொடுத்ததாலா?
காதலி முகத்தை கருயானை மறைத்ததாலா?
எழுதி எழுதி பேனாவே சலித்ததலா?
எழதிய கவிதைகளில் மற்றவர் பேர் எழுதுவதலா?
வாழ்வே கொஞ்சம் வெறுத்து போனதலா?
எதனாலோ ஒரு பூவும் பூக்க வில்லை!
ஏதேனும் மருந்தடித்து பூப்பறிக்க ஆசை கொண்டேன்!
எட்டி எட்டி முகம் பார்த்து காதல் கவிதைக்கு தயார் ஆனேன்!
"கண்ணே, வானம், நிலா" இல்லாத கவிதைகள் தோன்ற வில்லை!
உள்ள சோகம் எல்லாம் எடுத்து கவிதை சொல்ல தயாரானேன்!
கண்ணீரில் மூழ்கிய பேனா கடைசி வரை கிடைக்க வில்லை!
"பெண்கள் பற்றிய வர்ணனை கவிதைகள்" எனக்கே பிடிக்க வில்லை!
"இளைங்கனே எழு" போன்றவைகள் எழுத நான் லாயக்கில்லை!
இறந்தவர்கள் துதி பாடும் பழக்கம் எனக்கு இல்லை!
இவை தவிர தமிழ் மொழியில் கவிதை எழுத வகை கிடைக்க வில்லை!
இருந்தாலும் நான் என்னை தேற்றி கொண்டேன்,
"தலைப்பு ஒன்றும் கிடைக்க வில்லை" என்று!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக