என்ன செய்வாய் புத்தாண்டே!
மனிதற்கு மனம் தனை சரியாய் தருவாயா?
மழையை நேரத்தில் பொழிய செய்வாயா?
கடல் நீரை குடிநீராய் மாற்றி தருவாயா?
மதங்களை ஒன்றாய் இணைத்து விடுவாயா?
"இனங்கள் இல்லை" என்று ஆக்கி விடுவாயா?
வயல்கள் எல்லாம் பயிர்களால் நிறைப்பாயா?
பசியை மனிதகுலம் மறக்க செய்வாயா?
தீவிர வாதத்தை பூமியிலிருந்து பிடுங்கி எறிவாயா?
"அன்பே கடவுள்" என்று அனைவர்க்கும் சொல்வாயா?
கண்ணீர் என்ற திரவத்தை மறக்க வைப்பாயா?
உணவு, உடை, உறைவிடம் அனைவர்க்கும் கொடுப்பாயா?
இல்லை,
இது போன்ற கனவுகள் மட்டுமே ஏராளமாய் கொடுப்பாயா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக