கவிதைகள் பெரும்பாலும் காதலோடு சம்பந்த பட்டவை!
முதல் காதல், கவிதையின் "அ,ஆ" வை அறிமுகம் செய்யும்!
காதல் கடிதங்கள், கவிதையின் இளமை பருவம்!
நெஞ்சுக்குள் காதலை பொத்தி வைத்தவன் கவிதையிலே எரிமலையாய் இருப்பான்!
ஒன்று, இரண்டு காதல் தோல்வி கண்டவன், கம்பனுக்கே கவிதை கடன் கொடுப்பான்!
சமுதாயம், அரசியல், தேச பக்தி, பெண் முன்னேற்றம், தீண்டாமை
இவைகளும் கவிஞர்களை உருவாக்கும்!
இந்த கவிதை எழுத காதல் சொல்ல வில்லை!
மேற் சொன்ன வகைகளும் எதுவும் இல்லை!
பிடிக்காத வகுப்பில் 2 மணி நேரம் அமர்ந்ததால் பிறந்த கட்டாய கவிதை!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக