tag Guru Paarvaigal

செவ்வாய், 10 மே, 2011

குரு பெயர்ச்சி 
           நிகழும் 2011 ம் வருடம், மே மாதம் 05 ம் தேதி நவ கிரகங்களில் ஒருவரான குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். சுத்த வாக்கிய பஞ்சாங்கத்தின் படி, 08-05-2011 அன்று பெயர்ச்சி ஆகிறார்.

           குரு பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய மற்றும் சுமாரான பலன் பெறுவோர் கீழ் கண்ட சுலோகம் மற்றும் பாடல்களை தினமும் மாலையில் விளக்கேற்றி சொல்லி வர சிரமம் குறைந்து நன்மை பெறலாம்.
                                     --------------------------------------------------------
       குரு பெயர்ச்சி னு டைட்டில் பார்த்துட்டு ராசி பலன் எதிர் பார்த்து சுலோகம் தேடும் அன்பர்கள் கோபிச்சிக்காதீங்க! நான் சொல்ல வந்த குரு பெயர்ச்சியானது, இந்த நிர்மல் குரு  11 ம் தேதி காஞ்சிபுரம் ல இருந்து பெயர்ச்சி ஆகி ராஜபாளையம் போறத பத்தி. 
 
      பொதுவாவே, சென்னை ல இருந்து தென் பகுதிக்கு போகறதுக்கு கூட்டம் எப்பவுமே ஜாஸ்தியா தான் இருக்கும். இதுல, கோடை விடுமுறை னு பள்ளிக்கூடம் எல்லாம் லீவ் விட, குழந்தைகள் சேட்டை தாங்க முடியாம அவங்கள கொண்டு போய் தாத்தா, பாட்டி கிட்ட விடரவங்க கூட்டம் வேற. இந்த போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ரயில்வேசும் போக்குவரத்து துறையும் என்ன என்ன ஸ்டெப்ஸ் எடுத்து இருக்காங்கனு ஒரு ரிப்போர்ட் பார்த்தேன்!
 
          கோடை விடைமுறையை முன்னிட்டு, தென்னக ரயில்வே சென்னையில் இருந்து நாகர்கோயில் க்கு 21 புதிய ரயில்கள் விட பட்டுள்ளது. இது தவிர, ஏற்கனவே இயக்க படும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு, மொத்தமாக 6.35 லட்சம் பயணிகளை ஏற்றி செல்ல ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மேலும், ரயில்வே நிலையங்களில் கூடுதல் கவுன்ட்டர்கள் திறக்கப் பட்டுள்ளது.

     மாநில போக்குவரத்து துறை, கோடை விடைமுறையை முன்னிட்டு, மதுரைக்கு 14 சிறப்பு பேருந்துகளும், கும்பகோணத்திற்கு 8 சிறப்பு பேருந்துகளும், திருச்சி, ஹோசூர், பெங்களூர் ஆகிய ஊர்களுக்கு தலா 5 சிறப்பு பேருந்துகளும் இயக்க படுகின்றன.

          பிறகென்ன, ஜாலி ஆக போக வேண்டியது தானே னு நினைக்கிறீங்களா? இந்த ஸ்பெஷல் ரயில் பஸ் எல்லாமே யானை பசிக்கு சோளப்பொறி போல தான்!
    
    ஒரு நாளைக்கு 500 ஓம்னி பஸ் சென்னைல இருந்து தென் பகுதிகளுக்கு போகுது. சென்னை ஒன்னும் மெக்க மதினாவோ, திருப்பதியோ, வேலன்கன்னியோ இல்ல, கால் வச்சா சொர்க்கம் னு சொல்லிட்டு புண்ணியம் தேடி இங்க வர்றதுக்கு. மக்கள் இங்க வந்து குவியறதுக்கு காரணம் வெறும் வேலை வாய்ப்புகள் மட்டும் தான்.
 
        தமிழ்நாடு தலைமை செயலகம் இங்க இருக்கறதால தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அதிகாரிகள் அடிக்கடி இங்க வர வேண்டி இருக்கு. சாப்ட்வேர் கோர்ஸ் படிக்கிறவர்களுக்கு இங்க தான் வேலை , சினிமா சான்ஸ் தேடி வர்றவங்க இங்க தான் வந்து ஆகணும். அழைப்பு நடுவுல, அதாங்க, கால் சென்டர் ஜாப் இங்க மட்டும் தான் கிடைக்கும். கார் பாக்டரி கம்பனிகள் இங்க தான் இருக்கு.பேஷன் டெக்னாலஜி, கேட்டரிங் டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, நானோ டெக்னாலஜி எல்லா டெக்னாலஜி உம் படிச்சுட்டு வேலை பார்க்க னு இங்க தான் வந்து ஆகணும்.

       மனச ஊர்ல விட்டுட்டு, வயித்துக்காக இந்த ஊர்ல அகதியா திரியறோம். திருவிழா, லீவ் னா, உடனே ஊர்க்கு போகணும்னு நினைப்போம். பஸ் ஸ்டாண்ட் கு வந்து பாத்தா மேல போட்டோல பார்த்த மாதிரி கூட்டம்.

      சிவபெருமான் கல்யாணத்த பாக்க உலகமே வடக்கு பக்கம் வந்தது, அதனால வடக்கு தாழ்ந்து தெற்கு உயரமா  போச்சுன்னு ஒரு கத சொல்வாங்க, அந்த மாதிரி சென்னைய கடலுக்குள்ள அமுக்கிட்டு கன்னியாகுமரி ய உயரம் ஆக்காதீங்க. இப்போ லெவல் பண்ண அகத்தியர் வருவாரான்னு தெரியல.

     இவ்வளவு ஜன நெரிசலை குறைக்க தலை நகரத்த சென்னை ல இருந்து திருச்சிக்கோ மதுரைக்கோ மாத்தலாம், இல்லாட்டி சென்னை ல ஒன்னு, மதுரை ல ஒன்னு னு மொத்தம் ரெண்டு தலை நகர் வச்சுக்கங்க.(இந்த வார்த்தைல சத்தியமா அரசியல் இல்லேங்க). இல்லேன்னா இலவச டிவி,மிக்சி, கிரைண்டர் மாதிரி இலவச ஹெலிகாப்ட்டர் குடுத்தாங்கன்னா நல்ல இருக்கும்.

      இதெல்லாம் நடக்கற கதையா? வேற கேளுப்பானு சொல்றீங்களா? குரு பெயர்ச்சிக்கு ஒரு டிக்கெட் வேணும், கிடைக்குமா?
                 

2 கருத்துகள்:

sunaith சொன்னது…

ஒரு டிக்கெட் கு இதன்ன அக்க போறா????
இவன கேட்க ஆளே இல்லையா???

Nirmalguru சொன்னது…

ithu oru ticket ku illa da, ithe madiri oru koodi per kekurathu da!!!

கருத்துரையிடுக