tag Guru Paarvaigal

சனி, 21 மே, 2011

58th National film awards

        மே 19, 2011 அன்று 58 வது இந்திய தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டது . இது வரை இல்லாத அளவுக்கு மொத்தம் 14 விருதுகளை தமிழ் திரையுலகம் பெற்றது. சிறந்த நடிகருக்கான விருதை "ஆடுகளம்" திரைபடத்தில் நடித்த தனுஷ் வென்றார். அதே படத்தை இயக்கிய வெற்றிமாறன் சிறந்த ஒரிஜினல் திரைக்கதை எழுத்தாளர் விருதை வென்றுள்ளார் (அது என்ன ஒரிஜினல்? னு தெரிஞ்சவங்க சொல்லுங்களேன்). சிறந்த நடிகைக்கான விருதை சரண்யா பொன்வண்ணனும், சிறந்த துணை நடிகருக்கான விருதை தம்பி ராமையா அவர்களும் பெற்றுள்ளனர். இப்படியே நீண்டு செல்லும் பட்டியலில் சிறந்த பாடலாசிரியர் விருதை வென்றுள்ள வைரமுத்துவும் இடம் பெற்றுள்ளார்.
                           
         சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் உடல் நிலை பற்றி மருத்துவ மனை வாசலில் இருந்து தனுஷ் பேட்டி அளிக்கும் போதும் அவர் தேசிய விருது பெற்றது குறித்து கேள்விகள் கேட்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. குறிப்பாக அவர் அப்படத்தை வாங்கி வெளியிட்ட நிறுவனத்தை பற்றி நன்றியோடு குறிப்பிட்டது ஒரு நாள் முழுவதும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. சரண்யா பொன்வன்னனிடமும் பேட்டி காணப் பட்டு அடுத்த நாள் நாளிதழ்களில் வெளியிடப்பட்டது. "ஆடுகளம்" இயக்குனர் வெற்றிமாறனும் தனுஷுக்கு அடுத்து தொலைக்காட்சியில் முகம் காட்ட பட்டார். விருதுகளை வென்ற மற்றவர்கள் பலரும் காணாமல் போனவர்கள் பட்டியலில் தான் சேர்க்கபட்டார்கள்.(பட்டியலில் முதல் இடத்தில் இருப்பவர் வடிவேலு வா? என்று கேட்காதீர்கள்)

       தேசிய விருது வாங்கியும் கண்டு கொள்ள படாதவர்கள் பட்டியலில் கவிப்பேரரசு வைரமுத்துவையும் சேர்த்து விட்டார்கள். வைரமுத்து தேசிய விருது பெறுவது இது ஆறாவது முறை. ஒவ்வொரு முறை சதம் அடிக்கும் போதும் மற்றவர்கள் அதிக ரன் எடுத்து man of the match விருதை பெறுவதால், நம்மால் கிட்ட தட்ட மறக்க பட்ட டிராவிட் போல ஆறு முறை தேசிய விருது பெற்றும் வைரமுத்துவுக்கு உரிய மரியாதையை கொடுக்காமல் நடிக,நடிகையர்களுக்கும், இயக்குனர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

      வைரமுத்துவின் ஆற்றல் பற்றி நான் எழுத்தை தெரிய வேண்டியது இல்லை.    வைரமுத்து எந்த தேதியில் பிறந்தார் என்பது முதல் அவரது வாழ்க்கை குறித்த விவரங்கள் விக்கிபீடியா விலேயே உள்ளன.  அவர் பெற்ற தேசிய விருதுகளை பற்றிய விவரங்கள் வைரமுத்து.நெட் என்னும் இணைய தளத்தில் உள்ளது. அவரை பற்றி எல்லாமே இணைய தளத்தில் இருந்தும் எழுத பட வேண்டிய சில வார்த்தைகள் உள்ளதாய் படுகிறது.
 
           அவருடைய பத்து புத்தங்கள் படிப்பது ஒரு நூலகத்தில் நூறு ஆண்டுகள் கூடு கட்டி படிப்பதற்கு சமம். அவருடைய "காதலித்து பார்" என்னும் கவிதை காதல் செய்ய ஆரம்பிக்கும் அரும்பு மீசை காரர்களின் தேசிய கீதம். காதலி கிடைத்தும் கவிதை எழுத முடியாதவர்கள் வைரமுத்துவின் ஒன்றிரண்டு கவிதைகளை படித்ததும் சுயமாக எழுதுவார்கள். இல்லா விட்டாலும் சில கற்பனைகளை காலம் உள்ள வரை உபயோக்கிக்கலாம். (ஐம்பது கிலோ தாஜ்மஹால்).

             வைரமுத்து அவர்களுடைய "தண்ணீர் தேசம்" என்னும் நாவல் சிறப்பான பெயர் பெற்றது. அந்த நாவல் கிட்ட தட்ட ஒரு தமிழ் மசாலா திரைப்படம் போலவே இருக்கும். கதாநாயகனுக்கு பெற்றோர் பற்றிய விவரம் இருக்காது. (அவர்கள் இருந்தால் நாயகனுக்கு ஹீரோயசம் செய்ய வாய்ப்பு இருக்காது.) நிறைய படித்து அறிவுஜீவியாய் இருப்பார், ஆனால் நல்ல வேலைக்கு போகாமல் ஏதோ ஒரு வேலையில் இருப்பார். கதாநாயகி மிகுந்த அழகுடைய, வசதி படைத்தவருக்கு ஒரே மகளாய் இருப்பாள். எந்த ஒரு காரணமும் இல்லாமல் நாயகனை காதலிப்பது மட்டுமே கடமையாய் இருப்பாள். நாயகியின் தந்தை பண பலம் மிக்க ஒரு அரசியல்வாதி. இப்படி நாம் பார்த்து பழகிய கதாபாத்திரங்களை வைத்து, சாதாரணமாக சொல்ல பட வேண்டிய கதையில் அறிவியல் தமிழ் என்னும் நான்காவது தமிழை பயன்படுத்தி,  அந்த நாவலை பலரும் பாராட்டும் படி எழுதி உள்ளார்.

           தேசிய விருது பெற்ற தமிழகத்தை சார்ந்த மற்றவர்கள், தமிழை ஒரு கருவியாக மட்டுமே பயன்படுத்தி உள்ளார்கள். வைரமுத்து மட்டுமே தமிழில் தன் திறமையை நிருபித்து ஆறாவது முறையாக விருது பெற்றுள்ளார். விருது பெற்ற மற்றவர்களை புறக்கணிக்க கூற வில்லை, வைரமுத்துவிற்கு முதல் மரியாதை கொடுப்பது முறை என்று கருதுகிறேன்!      

             இன்னும் பல விருதுகள் பெற்று தமிழை வளர்க்க வாழ்த்துக்கள், வைரமுத்து!                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக