tag Guru Paarvaigal

சனி, 14 மே, 2011

தேர்தல் முடிவுகள்!

          ஏப்ரல் 13, 2011 ம் தேதி தமிழக மக்கள் வாக்கு அளித்து விட்டு காத்து இருந்த தவத்திற்கு மே 13,2011 அன்று வரமாக ஓட்டு எண்ணிக்கை நடை பெற்றது. 1991 இல் இருந்து இருபது வருடங்களாக தமிழக மக்கள் பின்பற்றி வரும் "எதிர் கட்சியை ஆளும் கட்சி ஆக்கும்" கொள்கை இந்த தேர்தலிலும் பின்பற்ற பட்டது.

              "வடை போச்சே" என்ற கவலையில் முந்தா நாள் ஆளுங்கட்சியினரும், கிடைத்த வடையை என்ன செய்யலாம் என்ற ஆவலில் இன்றைய ஆளுங்கட்சியினரும், இந்த தேர்தல் முடிவுகள் பற்றிய ஆராய்சியில் டிவியில் கோட் போட்ட வர்ணனையாளர்களும் இருப்பார்கள்.

      இன்றைய ஆளுங்கட்சியினரின் வெற்றிக்கு காரணம் "எதிர் கட்சியை ஆளும் கட்சி ஆக்கும்" மக்களின் மனோபாவம்,அதிரடி பிரச்சாரம் (விஜயகாந்த்?) போன்ற காரணங்களையும், நேற்றைய ஆளுங்கட்சியினரின் தோல்விக்கு காரணமாக அலைவரிசை ஊழல், குடும்ப ஆதிக்கம் போன்ற காரணங்களும், இன்னும் பிற விசயங்களும் கூட விவாதிக்க படலாம். 

             இருக்கட்டும், அவர்களுக்கு அது தான் தற்போதைய கடமை. நாம் நமது கடமைக்கு திரும்பலாம். இந்தியா சுதந்திரம் அடைந்த உடன் ஒரு விவசாயி கேட்டாராம் " நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் நான் கஷ்ட பட்டு விவசாயம் செய்ய தான் வேண்டுமா?" என்று. நாம் ஓட்டு போட்ட கட்சி ஆட்சியை பிடித்து விட்டது என்பதற்காக அந்த விவசாயியை போல கேட்க கூடாது, ஒரு வேலை தோற்ற கட்சிக்கு ஓட்டு போட்டு விட்டோமே என்று கவலை படவும் கூடாது. கடமையை செய்தாயிற்று, பலனாக மிக்ஸியோ, கிரைண்டரோ, ஆட்டுக் குட்டியோ, கிடைப்பதை வைத்து திருப்தி பட வேண்டும்.

         தேர்தல் முடிவுகள் அறிவிக்க பட்டு கொண்டு இருந்த பொழுது, பாபநாசம், தென்காசி, சேத்தூர் என தென் பகுதிகள் வழியாக பயணத்தில் இருந்தேன். எந்த விதமான கலவரங்களும் கண்ணில் பட வில்லை. ஒரு கொலை, குறைந்த பட்ச அரிவாள் வெட்டு, கல் வீச்சு, கடை அடைப்பு என எதுவுமே இல்லை. தமிழ்நாட்டில் ரௌடிகளின் வாடகை ஏறி விட்டதா என்று தெரியவில்லை. இல்லை, சீசனுக்கு வெயில் அடிக்கும், மழை வரும் என்பது போல இந்த தேர்தலில் இவர்கள் என்றால் அடுத்த தேர்தலில் அவர்கள் என்று அனைவருமே சமாதானத்துக்கு வந்துவிட்டார்கள் போல. தமிழ்நாடு அமைதி பூங்காவாக இருப்பதில் சந்தோசமே.

         கடைசியாக, தனது கட்சியோ, தலைவரோ, தோல்வி அடைந்த சோகத்தில் தீக்குளிக்க எண்ணி உள்ளவர்களை, யாரும் தடுக்காதீர்கள். சுய புத்தி இல்லாதவர்கள் தீக்குளிப்பதால் பூமிக்கு பாரம் குறையும், மற்ற படி அவர்களின் குடும்பம் தவிர நாட்டுக்கு இழப்பு ஏதும் இல்லை.

         
   
    
         

               
 

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக