tag Guru Paarvaigal: Baba Raamdev - Hero or Comedian?

திங்கள், 6 ஜூன், 2011

Baba Raamdev - Hero or Comedian?

பாபா ராம்தேவ்


          போட்டோ ஷாப் உதவியோடு கைகளுக்கு இடையில் சூரியனை எழுப்பும் இந்த காவி துறவியை இதற்கு முன்னால் ஸ்டார் டிவியிலும் சஹாரா டிவியிலும் யோகா நிகழ்ச்சிகள் நடத்தும் போது பார்த்து இருப்பீர்கள்.இந்த ஆன்மிக துறவிகளின் திருநாமம் ராம் கிருஷ்ணா யாதவ்; இப்போது அப்படி சொன்னால் சுவாமிகளின் சீடர்கள் வருத்தப்பட கூடும். எனவே, தற்போது அனைவரும் இவரை அழைக்கும் படி பாபா ராம்தேவ் என்னும் பெயரிலேயே நாமும் குறிப்பிடலாம். இப்படி ஒருவர் இருக்கிறாரா? என்று கேட்கும் இனிய அன்பர்கள், இந்த கட்டுரையை படிக்காமல், 8 வது தொகுதியாக நடக்கும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் குஷ்பூவுக்கும் நமீதாவுக்கும் இடையில் நாலாவது நடுவராக போகலாம், தவறில்லை.

          நாடு முழுவதும் யோகா நிகழ்ச்சிகள் நடத்தி பிரபலம் ஆன நிதான வேகம், சுவாமிகளுக்கு பிடிக்க வில்லையா என தெரிய வில்லை. ஒரே வாரத்தில் அடித்த பப்ளிசிட்டி ச்டன்ட்டுகளினால் கூகுள் இணைய தளத்தில் அதிக நபர்களால் தேடப்பட்ட பெருமையை பெற்றுள்ளார். காந்தியவாதி திரு. அன்னா ஹசாரே அவர்கள் ஊழலுக்கு எதிராக போராடி உண்ணா விரதம் இருந்த பார்முலா வெற்றி அடைந்து இருந்ததால், அதிக ரிஸ்க் இல்லாமல் அதே பார்முலாவை பின்பற்றி உண்ணா விரதம் அறிவித்தார்.

                  பாபா ராம்தேவ் அவர்கள் மத்திய அரசிடம் கீழ்க்கண்டவாறு கோரிக்கைகளை தெரிவித்து, நிறைவேற்றா பட விட்டால், உண்ணா விரதம் இருக்க போவதாக அறிவித்தார்.

1 ) இந்தியர்களிடம் இருந்து கைப்பற்ற படும் கருப்பு பணத்தினை இந்திய அரசாங்கத்தின் சொத்தாக அறிவிக்க பட வேண்டும்;

2 ) சுவிட்சர்லாண்டு வங்கிகளில் பணம் பதுக்குவதை தேசிய துரோகமாக அறிவிக்க வேண்டும்;

3 ) ஊழல் குற்றம் புரிந்து குற்றம் நிருபிக்க பட்டால், குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்க பட வேண்டும்;

4 )லோக்பால் சட்டம் இயற்றப்பட வேண்டும்;

5 )மாநிலங்களில் பாஸ்ட் புட், ச்சே, பாஸ்ட் கோர்ட்கள் அமைக்க பட வேண்டும், குறிப்பாக ஊழல் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும்;

6 ) 500, 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழித்து விட வேண்டும்;

7 )பொறியியல், மருத்துவம், விவசாயம் உள்ளிட்ட படிப்புகளை பாரதீய மொழிகளில் கற்பிக்க பட வேண்டும்;

8 )பிரதமரை மக்கள் நேரடியாக வாக்களித்து தேர்வு செய்ய வேண்டும்;

9 )எந்த ஒரு தனி மனிதனுக்கும் அவன் குறிப்பிட்ட சேவைகளை செய்ய தவறிய அரசு அதிகாரி அந்த நபருக்கு நஷ்ட ஈடாக பணம் தர வேண்டும்;

10)வெள்ளைக்காரர்கள் அறிமுக படுத்திய நில கையப்படுத்தும் சட்டம் ரத்து செய்ய பட வேண்டும்;

        கோரிக்கைகளை படிக்கும் போது, பாபா ராம் தேவ் ஒரு காவி உடை அணிந்த 'முதல்வன்' அர்ஜுன் போலவே தெரிந்தார். இந்த கோரிக்கைகளில் பெரும்பான்மையானவைகள் ஏற்று கொள்ள பட்டது, மற்றவைகளின் மீது விவாதம் தேவை என மத்திய அரசு சார்பில் திரு.கபில் சிபல் தெரிவித்து பாபா உண்ணாவிரதத்தை விலக்கி கொள்ள வேண்டும் என கேட்டு கொண்டார். இந்த இடைவேளை காட்சிக்கு பிறகு, ஹீரோ வாக இருந்த பாபா காமெடி செய்ய ஆரம்பித்துள்ளார்.

         மத்திய அரசின் பேச்சு வார்த்தைக்கு பிறகு, உண்ணா விரதத்தை விலக்கி கொள்வதாக பாபா கையெழுத்து இட்டு கடிதம் அளித்தார். பிறகு, இடையில் நடந்த மாற்றத்தினால், திடீரென தாம் ஏமாற்ற படுவதாக பேட்டி அளித்தார்; டெல்லி ராம் லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்க ஆரம்பித்த போது, பாபா அந்த மைதானத்தில் யோகா நிகழ்ச்சிகள் நடத்த போவதாக மட்டுமே அனுமதி வாங்கி இருந்தது தெரிய வந்தது.  தான் மட்டும் தனியாக இல்லாமல், துணைக்கு 30,000 தொண்டர்களுடன் உண்ணாவிரதம் ஆரம்பித்தார், பாபா.

     அதிகாலை 01 .30 மணிக்கு, அனைவரும் உறக்கத்தில் இருந்த போது, ராம் தேவை கைது செய்ய போலீஸ் வந்தது. "பில்டிங் strongu, பேஸ்மென்ட் வீக்கு" என்று வடிவேல் சமாளிப்பது போல, "போலீஸ், போலீஸ்" என்று கத்தாமல் " மைக்கில் "வந்தே மாதரம், வந்தே மாதரம்" என்று கத்தி தொண்டர்களை எழுப்பினார்.  அதையும் தாண்டி போலீஸ் அருகே வந்ததும் பொருட்களை எடுத்துக் கொள்ள ஐந்து நிமிடம் அவகாசம் கேட்டு விட்டு, திடீரென 15 அடி உயர மேடையிலிருந்து குதித்து (நம்ம போலீஸ் மக்களுக்கு இருக்குற தொப்பைக்கு அவ்ளோ தூரம் குதிக்க முடியாது தான், எல்லோருக்கும் இந்த பாபாவை வைத்து யோகா சொல்லி தர கேட்கலாம்.) பெண் பக்தைகளுக்கு மத்தியில் ஒளிந்து கொண்டார். ஒரு வழியாக கண்ணா மூச்சி விளையாட்டு முடிந்து, சுடிதார் உடையில் ஒளிந்து இருந்த பாபா கைது செய்ய பட்டு, ராம் லீலா மைதானத்தில் இருந்து வெளியேற்ற பட்டார்.

"எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் " என்ற பஞ்ச் டயலாக்கோடு காமெடி நிறைவு அடைந்ததாக கருதலாம். பாபா ராம் தேவும் தான் விரும்பிய பப்ளிசிட்டி அடைந்ததற்கு பெருமை கொள்ளலாம். இவராலாவது ஏதாவது மாற்றம் வருமா என்று விரும்பிய மக்கள் மட்டும் அன்னா ஹசாரே - பார்ட் 2 வரும் வரைக்கும் காத்திருக்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக